சென்னை: விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது; சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

மரம் விழுந்து இருவரு  பலியான முதியவர், ஆசிரியர் குடும்பத்தினர்  சார்பாக இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டி ருந்தது. இந்த வழக்கு சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மனுதாரரின் ஆவணங்கள் ஆராயப்பட்டு முறையான இழப்பீடு வழங்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, விபத்து இழப்பீடு வழங்கப்படும் நடைமுறையில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சிலருக்கு ரூ.1 கோடி, சிலருக்கு ரூ.1 லட்சம் எனவும் இழப்பீடு வழங்கப்படுவதாக வேதனை தெரிவித்ததுடன்,  இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார்.