சென்னை:

டிகர் ரஜினிகாந்த்தை புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெற்றது அரசியல் விமர்சகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமான கல்லூரி விழாவில் அரசியல் வெற்றிடம் பற்றி ரஜினி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.