சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் குளிர்சாதன  வசதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் பல்வேறு தளர்வுகளை மாநிலம், மத்திய அரசுகள் சில மாதங்களாக விதித்து வந்தது.

இந் நிலையில், தற்போது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஓட்டல்களில் ஏசி வசதியை பயன்படுத்தி கொள்லாம் என்று தமிழக அரசு அனுமதி தந்து அறிவித்துள்ளது.

மத்திய அரசின் நிபந்தனைகளின் படி உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தி கொள்ள அனுமதி தரப்படுகிறது. ஆனாலும்,  வாடிக்கையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.