ண்டிகர்

ஞ்சாப் பற்றிக் குறை கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா பதில் அளித்துள்ளார்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை என்றும், பஞ்சாப் மாநில அரசு சட்ட ஒழுங்கை காக்கத் தவறிவிட்டதாகவும் விமர்சித்திருந்தார்.

ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்  ராகவ் சத்தா, “ராஜ்நாத் சிங்குக்கு பஞ்சாப் குறித்து தவறான தகவல் கிடைத்துள்ளது என நினைக்கிறேன். பஞ்சாப் முதல்-மந்திரி பக்வந்த் மான் தலைமையில் நடைபெறும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் மாநில சட்ட ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது.

அமைச்சர் முதலில் மணிப்பூர் எரிந்து கொண்டிருப்பதையும், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிற்பதையும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதையும் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மற்ற மாநிலங்களைச் சுட்டிக்காட்டும் முன் மணிப்பூர் வன்முறைக்கு முதலில் பொறுப்பேற்கவும்.

டில்லியில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.  தினமும் அங்குக் கொலை, கற்பழிப்பு, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. குற்றங்களின் எண்ணிக்கை டில்லியில் அதிகரித்து வருகிறது.

மத்திய பா.ஜ.க.வின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட டில்லி மற்றும் மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.”  என்று தெரிவித்துள்ளார்.