ராமேஸ்வரம்:
லங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

இந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்களையும் கைது செய்து, படகையையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.