திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை கொல்ல கத்தியுடன் பாய்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று  முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விமானம் மூலம் திருச்சி வந்தடந்தார்.  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது ஒரு சந்தேகத்துக்குரிய நபர் ஓ பி எஸ் ஐ நோக்கி வேகமாக பாய்ந்து வந்தார்.  இதை கண்டு பரப்பராகிய அ தி மு க தொண்டர்கள் விமான பாதுகாப்பு காவலர்களிடம் அவரை சுட்டிக் காட்டினர்.   அந்த நபரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

அவரை சோதித்ததில் அவர் பெயர் சோலை ராஜன் என்பதும் அவர் ஓ பன்னீர்செல்வத்தை கொலை செய்ய கத்தியுடன் வந்தவர் என்பதும் தெரிய வந்தது   ஆத்திரமடந்த தொண்டர்கள் அவரை தாக்கத் தொடங்கினர்.  காவலர்கள் அவரை மீட்டு போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதே விமானத்தில் ஓ பன்னீர் செல்வத்துடன் அமைச்சர் விஜய பாஸ்கர், செந்தில் பாலாஜி ஆகியோரும் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.