வாரணாசி:
தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்ற நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் காசியில் சிக்கிக் கொண்டனர்.  அவர்கள் கடந்த வாரம் தமிழகம் திரும்பிய நிலையில், அவர்களில் 2 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தைச் 127 பேர் கொண்ட யாத்ரிகர்கள் குழு  ஊரடங்கால் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிக்கிக்கொண்டனர்.  6வயதான அவர்களின் நலனைக் கருதி,  தமிழகஅரசின் வேண்டுகோளை ஏற்று  அவர்கள் 3 பேருந்துகள் நாளை தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த வாரம் அவர்கள் தமிழக எல்லை வந்த நிலையில், அவர்கள் அனைவரும் 14 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 2 பெண்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.