கோவை:
பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக பிரமுகர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜக நடத்திய சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை அவமதித்ததாக பாஜக பிரமுகர் வெங்கடேஷ் மீது வழக்கு பதியப்பட்டது. பாஜக பிரமுகர் வெங்கடேஷ் மீது தேசிய கெளரவ பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.