சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 68 பேர் கொரோனாவால் பலியாக ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இன்று 68 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழக்க ஒட்டு மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 3,617 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,532 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,969 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,076 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.