ஜூன் 14-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் கடைசியாக நடித்த தில் பெச்சாரா’ மே மாதம் வெளியாகவிருந்தது . ஆனால் கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. ஊரடங்கு நீடிப்பதால் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சுஷாந்த் சிங்கின் ரசிகர்களோ அவருடைய இறுதிப்படம் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
A story of love, hope, and endless memories.
Celebrating the late #SushantSinghRajput's legacy that will be etched in the minds of all and cherished forever. #DilBechara coming to everyone on July 24. pic.twitter.com/3gPJZvBRun— Disney+ Hotstar Premium (@DisneyPlusHSP) June 25, 2020
ஆனால், ‘தில் பெச்சாரா’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகிவிட்டது. ஜூலை 24-ம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் இந்தப் படத்தைக் காணலாம்.