
சென்னை,
மெர்சல் படத்தில் அரசுக்கு எதிராக பேசியிருப்பதாக கூறி, படத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு குறித்து பேசி இருக்கிறார். இது இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக வசனங்கள் அமைந்திருப்பதால், தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தெரிவித்தது.
Patrikai.com official YouTube Channel