
சென்னை,
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது திட்டக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு, ஐந்து ஆண்டு காலம் பொறுப்பு வகித்தார்.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா முதல்வரானதும் முதல்வரின் தனிப்பிரிவில் சிறப்பு செயலாளர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு சாந்தா ஷீலா நாயர் அமர்த்தப்பட்டார்.
Patrikai.com official YouTube Channel