மேட்டூர் :
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு மேட்டுருக்கு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தற்போதைய அணையின் நீர்மட்டம் 52.80 அடியாக உள்ளது. கடந்த 5 நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் சுமார் 5 அடி தண்ணீர் அணையில் உயர்ந்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel