சென்னை: தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் அர்லேகர் இன்று பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதுபோல மேற்குவங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அம்மாநில கவர்னராக பதவி ஏற்கிறார்.
பொறுப்பு ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா் நேற்று ( மார்ச் 11-ஆம் தேதி) சென்னைக்கு வந்த நிலையில், இன்று முற்பகல் சுமாா் 12 மணியளவில் பதவியேற்கிறாா். உயா்நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.