சென்னை: இன்று இந்திய அரசியலமைப்பு நாள். இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அரசியலமைப்பு தினம், சம்விதன் திவாஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் இன்று இந்திய அரசியலமைப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, ஒரு குறிப்பிட்ட கலாசாரம், சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல.
இந்த அரசியலமைப்பு நாளில், அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்ப்போம்.
நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்கவும், தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதே, நமது அரசியலமைப்பிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.