சென்னை: கோயம்பேட்டில் பள்ளி சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை வன்கொடுமை செய்த  திமுக பிரமுகரான உளுந்தை முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 15 வயது பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆந்திராவைச் சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மாள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாணவி தங்கியிருந்த  பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர்  அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர் அவரது மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அந்த சிறுமையை கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இவர்களுக்கு ஆதரவாக   திருவள்ளூரை சேர்ந்த உளுந்தை ரமேஷ் ( திமுக நிர்வாகி / வயது 40) என்பவர் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.