சென்னை
காவல்துறை ஆணையர் சென்னையில் பள்ளி வேலை நேரங்களில் கனரக வாகனங்கள் வரக்கூடாது என தடை விதித்துள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை வாக்கின்ஸ் தெரு சந்திப்பில் காலை மொபட்டில் தாயுடன் சிறுமி சவுமியா பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது சாலையில் உள்ள பள்ளத்தில் மொபட் இறங்கி ஏறிய போது நிலை தடுமாறி சிறுமி கீழே விழுந்தார். பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி சவுமியா மீது ஏறி இறங்கியதில் சிறுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு பள்ளி வேலை நேரங்களில் கனரக வாகனமான தண்ணீர் லாரி சென்னை உள்ளே வந்தது தான்கு காரணம் என தெரியவந்ததால் பள்ளி வேலை நேரத்தில் இயக்கப்பட்ட தண்ணீர் லாரியை தடுக்க தவறியதாக செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தும், புளியந்தோப்பு போக்குவரத்து உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவக்கை எடுத்தும் போலீஸ் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
காவல்துறை ஆணையர் அருண்,
”சென்னை பெருநகர காவல் எல்லையில் பள்ளி வேலை நேரமான காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தண்ணீர் லாரி உள்பட எந்தவித கனரக வாகனங்களும் உள்ளே வர அனுதிக்க கூடாது. இந்த கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் உள்ளே வருவதை போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று போக்குவரத்து மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.