சென்னை

நேற்று மொபைல் சேவை பாதிக்கப்பட்டது குறித்து ஏர்டெல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்றாக உள்ளது  ஆனால் ஏர்டெல் நேற்று மாலை பரவலான நெட்வொர்க் இடையூறுகளை சந்தித்தது. இதையொட்டி சென்னை, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்னல் கிடைக்கவில்லை என்று புகார் கூறியுள்ளனர். ஏர்டெல் நிறுவனத்துக்கு 10000 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள்ன.

ஒதில் சில பயனர்கள்மொபைல் டேட்டா சேவைகள் மெதுவாக செயல்படுவதாகவும், அழைப்புகள் திடீரென துண்டிக்கப்படுவதாகவும். நெட்வொர்க் கவரேஜ் இல்லாதது, வோல்டேஜ் சிக்கல்கள் குறித்தும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், விரக்தியடைந்த பயனர்கள் சமூக ஊடக தளங்களில் புகார்களைப் பதிவிட்டுள்ளனர். ஒரு சிலர் ஏர்டெலை விமர்சித்து மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஏர்டெல் நிர்வாகம் தரப்பில் ,

” தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏர்டெல் நேற்று மாலை தற்காலிக நெட்வொர்க் செயலிழப்பை சந்தித்துள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து, சேவைகளை விரைவாக மீட்டெடுத்துள்ளனர். தற்போது சேவை முழுவதுமாக சரியாகி உள்ளது”

என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.