சென்னை

தெற்கு ரயில்வே நாளை சென்னை எழும்பூர் மற்றும் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது.

தெற்கு ரயில்வே,

“குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் .

இந்த சிறப்பு ரயிலானது (06053) சென்னை எழும்பூரில் இருந்து 24-ந்தேதி  இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, கொடைக்கானல் ரோடு, மதுரை, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக கன்னியாகுமரியை வந்து சேரும்.

மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து (06054) 26-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்”

என அறிவித்துள்ளது.