டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகம் ஆனதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்பதும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைவ ராகுல் காந்தி இது குறித்து எக்ஸ் தளத்தில்,

”இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தியதை தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இது இரும்பு யுகத்தில் இந்தியாவின் தொடக்ககால முன்னேற்றத்தை காட்டுகிறது

தமிழகத்தின் பங்களிப்புகள், நாடு முழுவதும் எண்ணற்ற மைல்கற்களுடன் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும், குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம்.”

என்று பதிவிட்டுள்ளார்.