டெல்லி: கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு வழக்கில்  அவருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான சம்மன்களை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவருக்கு நிவாரணம் வழங்கினார்.

சிவகங்கை தொகுதியாக உள்ள கார்த்தி சிதம்பரம்,  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனாவார். கடந்த கடந்த 2011ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில், உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த காலக்கட்டத்தில்,  வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்திமையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது.  அந்த பணி தாமதமானால், அதற்காக சீனாவில் இருந்த வந்திருந்த  சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களின் விசா முடிவடைந்தது. அதனால் அவர்களுக்கு மீண்டும் விசா நீடிப்பு செய்யும் வகையில், அவர்கள் அப்போதைய அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தை நாடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சீனாவைச் சேர்ந்த  263 ஊழியர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தரப்பட்டது. இதுதொடர்பாக, வேதாந்தா  நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரராமன் என்பவருக்கும் ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுத்தாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.   இது தொடர்பாக ப.சிதம்பரம் வீட்டில்  கடந்த 2022ம் ஆண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாஸ்கரராமனை கைது செய்தனர். சிபிஐ புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு பதிவு செய்து சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழங்கில் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இந்த நிலையில்,  சீன விசா  வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சீன விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: ப.சிதம்பரம் சென்னை வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை…

கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு: ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு