சென்னை

ன்று காலை திடீரென தமிழக ஆளுநர் ஆர் என் ரவி டில்லி சென்றுள்ளார்.

கடந்த 12 ஆம் தேதி தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இன்று நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது.

இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென டில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று காலை 6 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி 4  நாள் பயணமாக டில்லி சென்றதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 22ம் தேதி ஆளுநர் டில்லியில் இருந்து சென்னை திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  இன்று தமிழக சட்டசபையில் பட்னெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் திடீர் டில்லி பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.