சென்னை
இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரய்ல் சேவை மாற்றம் சேய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னை ரயில்வே கோட்டம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில்,
”இன்று திருவள்ளூர் – திருநின்றவூா் இடையே காலை 10 முதல் பிற்பகல் 2.15 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.
எனவே சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணிக்குக் காலை 9.10 முதல் பகல் 1.10 மணி வரை செல்லும் மின்சார ரயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை ரயில் நிலையத்தில் நிற்காது’
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel