சென்னை

ன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நீதிமன்றம் அமைச்சரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி  செய்ததால் அவர இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால் அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொலி காட்சி மூலம் புழல் சிறையில் இருந்து முன்னிறுத்தப்பட்டார்.  நீதிபதி அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13 வரை நீட்டித்து உத்தரவிடடார் .

இன்று எம் பி, எம் எல் ஏ க்களுக்கான நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.  இதுவரை செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதியப்பட்டு அந்த 3 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.