ன்னியாகுமரி

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர்

தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். நேற்று  வார விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியைக் காண அவர்கள் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர்.  இன்று ஞாயிறு விடுமுறை என்பதாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.

குறிப்பாகச் சூரிய உதயத்தைக் காண சன் ரைஸ் பாயிண்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையைக் காணவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.