திருவண்ணாமலை

ரும் 1 ஆம் தேதி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறுகிறது.

 

உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. தினமும் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இங்கு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

கோவில் நிர்வாகம் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அறிவித்து உள்ளது. வரும் 1 ஆம் தேதி அதிகாலை 3.25 மணிக்குத் தொடங்கும் பவுர்ணமி மறுநாள் 2-ந் தேதி அதிகாலை 1.05 மணிக்கு நிறைவடைகிறது. எனவே செவ்வாய்க்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.