முறைமாமன் படத்தின் மூலம் 1995 ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நுழைந்தவர் இயக்குனர் சுந்தர் .சி

25 ஆண்டுகளுக்கும் மேலாக மினிமம் பட்ஜெட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துவருவதுடன் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து வருகிறார்.

2018 ம் ஆண்டு ‘சங்கமித்ரா’ என்ற பெயரில் வரலாற்றுப் படம் ஒன்றை மெகா பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டார்.

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சர்ச்சையால் நின்றுபோனது.

தனது கனவுப்படமான ‘சங்கமித்ரா’ படம் முடிவடைந்ததும் சினிமாவுக்கு முழுக்குப் போடப்போவதாக சுந்தர் சி கூறிவருகைதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் சுந்தர் சி-யின் கனவை நிறைவேற்ற கைகொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சங்கமித்ரா படத்தை தொடர ரெட் ஜெயண்ட் நிறுவனம் உதவி செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை இன்னும் அவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.