சென்னை:
சிறப்பு முகாமில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புக்காக, இதுவரை நடந்த, 31 மெகா தடுப்பூசி முகாம்களில், 4.61 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை சார்பில், நேற்று ஒரு லட்சம் மையங்களில், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
தமிழகம் முழுதும் நேற்று நடந்த, 32வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில், 18 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel