சென்னை:
கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு தெரிவித்து கொள்கிறேன் என்றும், மே1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel