சென்னை:
சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 5-ம் தேதி அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை சென்னையில் ஓபிஎஸ் தலைமையிலும், திருச்சியில் ஈபிஎஸ் தலைமையிலும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel