சென்னை: ஜனவரியில் 3 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஜனவரி 15ந்தேதி, 18ந்தேதி மற்றும் 26ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. ஆனால், டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, மாட்டுப்பொங்கல் நாளான டிசம்பர் 15ந்தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 18ந்தேதி தைப்பூசத்தை முன்னிட்டும், ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.