பிரபல பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

பிரபல பாடகி சுசித்ரா மற்றும் யாரடி நீ மோகினி படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடித்த கார்த்திக் குமார் ஆகிய இருவரும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.  பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.

கார்த்திக் குமார் தற்போது ஸ்டாண்ட் அப் காமடியனாக மேடை நிகழ்வுகள் நடத்தி வருகிறார். இன்று கார்த்திக் குமார் மற்றும் நடிகை அம்ருதா சீனிவாசன் ஆகியோருக்கு திருமணம் நடந்துள்ளது.  இரு வீட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது.

நடிகை அம்ருதா சீனிவாசன் மேயாத மான், தேவ் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   இவர்களின் திருமணப் புகைப்படம் சமூக வலை தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.