விருதுநகர்:
விருதுநகரில் பாலம் இல்லாததால் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், ஆற்றின் மீது பாலம் இல்லாததால், டிசம்பர் 1-ம் தேதி வெள்ளம் வடியும் கிருதுமால் ஆற்றின் வழியாகக் கிராம மக்கள் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுகுறித்து காணொளி செய்திகளில் வெளியானது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவிக்கையில், பாலம் கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel