சென்னை: 
2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகே உள்ள போதா வூரைச் சேர்ந்தவர் முருக பாண்டி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இத்தம்பதியின் மகள்கள் இரண்டரை வயது இனியா, 5 மாத கைக்குழந்தை கவிதா. மது அருந்தும் பழக்கம் உடைய முருக பாண்டி அடிக்கடி மது அருந்துவதுடன், வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
முருகபாண்டி, சத்யா இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சத்யா, அருகிலுள்ள வயல் பகுதிக்குச் சென்று தனது 2 குழந்தை களையும் கிணற்றுக்குள் வீசிவிட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில், இரு குழந்தைகளும் நீரில் மூழ்கிவிட்ட நிலையில், சத்யா மட்டும் நீரில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து சத்யாவைக் காப்பாற்றினர்.
அப்போது, 2 குழந்தைகளும் நீரில் மூழ்கிவிட்டதாக சத்யா கூறியதைத் தொடர்ந்து, ஊர் மக்கள் கிணற்றுக்குள் குதித்துத் தேடினர். அரை மணிநேரத்துக்குப் பிறகு 2 குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு  சென்னை அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்துப் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.