சிவங்ககை: குன்றக்குடி சண்முகநாதர் கோவில் தொடக்கப்பள்ளியில் யானையைக் கொண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் ற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவிட்டதால், இன்று முதல் (நவம்பர் 1) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வரும் மாணாக்கர்களுக்கு, பள்ளி  நுழைவு வாயிலில் உடலின் வெப்ப நிலையை பரிசோதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு மலர் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி  சண்முகநாதர் கோவில் தொடக்கப்பள்ளியில், பள்ளிக்கு வந்த மாணவர்களை,  சண்முகநாதர் கோவில் யானை மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.