நடிகை ரேவதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார்.

இது வரை நான்கு படங்களையும் இயக்கியுள்ளார். 2010-க்குப் பிறகு படம் இயக்காமல் இருந்த இவர் தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்க தயாராகியிருக்கிறார். அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ரேவதி இயக்கும் இந்தப் படம் இந்தியில் உருவாகவிருக்கிறது. முதன்மை கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்கும் இந்தப் படத்திற்கு ’த லாஸ்ட் ஹுரா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் கஜோல், ரேவதி சொன்ன கதைக்கு உடனடியாக ஒப்புக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளர். அதோடு ரேவதி மற்றும் குழுவினருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]