சென்னை:
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, ஒரு சில பகுதிகளை மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel