சென்னை:
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வு எழுதி மன அழுத்தத்திலிருந்த 200 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு. அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி நீட் தேர்வு எழுதிய 80% மாணவர்களுக்கு தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel