சென்னை:
தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூ.10ல் ரூ.500 ரை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்த ரக மது பானங்கள் விலையில் 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்கள் விலையில் 300 ரூபாயும், உயர்ரக மதுபானங்கள் விலையில் 500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel