சென்னை:
நாளை முதல் வண்டலூர் பூங்கா திறக்கப்பட உள்ளதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டது. ஆனால் முறையான அறிவிப்பு வராததால் வண்டலூர் உயிரியல் பூங்கா மட்டும் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நாளை முதல் வண்டலூர் பூங்கா திறக்கப்பட உள்ளதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இணை இயக்குநர் காஞ்சனா தெரிவிக்கையில், கொரோனா காரணமாகக் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என்றும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பார்வையாளர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel