சென்னை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பலராலும் கூறப்பட்டது. எனவே இது குறித்த உண்மைகளை அறிய முந்தைய அதிமுக அரசு முன்னாள்  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.  குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடியாததால் இந்த ஆணையத்தின் ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது.  இந்த ஆணையத்தின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் ஆறுமுக சாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  எனவே  இன்னும் 6 மாதங்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையைத் தொடர்ந்து முடிவுகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.