சென்னை

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.    ஆயினும் பரவல் குறையாததால்  தளர்வுகள் நீக்கப்பட்டு முழு ஊரடங்கு அமலானது.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது.  நேற்று தமிழகத்தில் 15100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சென்னையில் 962 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   தமிழகத்தில் தளர்வுகளுடன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பும் ஒன்றாகும்.  இதையொட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறி முறைகளில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.