சென்னை: தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக மூத்த திமுக எம்எல்ஏ பிச்சாண்டி பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமானம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தேர்தல் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வகையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இதையடுத்து, தமிழக சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சட்டப்பேரவை தலைவராக கு.பிச்சாண்டியை தமிழக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தற்காலிக சபாநாயகராக மூத்த திமுக எம்எல்ஏ பிச்சாண்டி பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

Patrikai.com official YouTube Channel