பேட்ட’ படத்தையடுத்து மீண்டும் ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருந்த நேரத்தில், இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தால் ரஜினியும் நோய் வாய்ப்பட்டார். இதனால் தனது அரசியல் பிரவேச யோசனையை கைவிட்டார். இதற்கிடையே ’அண்ணாத்த’ படப்பிடிப்பு 60% முடிந்துள்ளது.

இந்நிலையில் ரஜினி தனது திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் மீண்டும் ரஜினியும் கார்த்திக் சுப்பராஜும் மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

லாக்டௌனின் போது கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் சந்தித்ததாகவும், இருவரும் ஒரு படத்திற்கான கதையைப் பற்றி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது .

இப்போது, ​​சன் பிக்சர்சும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தலைவர் 169 என்று தற்போது அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.