கேரள மாநிலம் கொச்சியில் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ வுக்கு 10 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

நவீன தொழில் நுட்பத்துடன் உருவாகியுள்ள இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து திறந்து வைத்தார்கள்.

‘அம்மா’ சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்போருக்கு உதவ, ஏற்கனவே அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘ட்வெண்டி: 20’ என்ற பெயரில் சினிமா தயாரித்தனர்.

இப்போது கொரோனாவால் சினிமா நடிகர்கள். பெரும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவ ‘அம்மா’ சார்பில் மீண்டும் சினிமா தயாரிக்கப்படுகிறது.

பிரியதர்ஷனும், ராஜீவ் குமாரும் இணைந்து டைரக்டு செய்கிறார்கள்.
இந்த படத்தில் பணி புரிய அம்மா சங்கத்தில் உள்ள 140 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

திரில்லர் படமான இதனை பெரும் ப்ட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர், படத்துக்கு பெயர் வைக்கவில்லை.

அதன் பொறுப்பு ரசிகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நல்ல பெயரை சூட்டும் ரசிகருக்கு ஆச்சரியமான பரிசு காத்திருக்கிறது.

– பா. பாரதி