சென்னை: தமிழகத்தில் நாளை பொதுபோக்குவரத்துக்கு தமிழகஅரசு பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  பயணிகள் பேருந்து பயணத்தற்கான பாஸ் வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல்  பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் மாதம், மாவட்டங்களுக்கு இடையே  பேருந்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், தொற்று பரவல் இதன் காரணமாக மேலும் அதிகரித்ததால், மீண்டும்,  பொதுப் போக்குவரத்து மீண்டும் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி (நாளை) முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து கள் கட்டுப்பாடுகளடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு போக்குவரத்துக்கழகங்களில் பேருந்துகள் சுத்தப்படுத்தப்பட்டு, பேட்டரிகள் சரி செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து பேருந்தில் பயணிக்க வேண்டும் எனவும், 50 சதவிகித பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில், பயணிகள் பேருந்து பயணத்துக்கான மாதாந்திர பாஸ்,  தினசரி பாஸ், விருப்பம் போல் பயணம் செய்யும் 1000 ரூபாய் போன்றவற்றை  பாஸ் பெற்றுக்கொள்ளலாம் -போக்குவரத்துத்துறை அறிவித்து உள்ளது.