வாஷிங்டன்: உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் மட்டும் 24லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தி லான்செட் மருத்துவ இதழ் உலகம் முழுவதும் காற்று மாசு உயிரிழப்பு குறித்து ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  உலகம் முழுவதும் வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்நிறுவனங்கள்  அதிகரித்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் காற்று மாசுவும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் தொழில்சாலைகளில் இருந்து வெளிவரும் அசுத்தமான காற்று காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் காற்று மாசு காரணமாக   உயிரிழக்கும் மக்கள் 55 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது. காற்று மாசுவுடன் சிகரெட் புகைத்தல் மற்றும் பல்வேறு புகை ஆகியவையும் இணைவதன் மூலம் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு கள் அதிகமாகி வருவதாக தெரிவித்து உள்ளது.

காற்று மாசுபாடு காரணம் என்பதற்கு பதில், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், பிற நுரையீரல் பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோய்களை உள்ளிட்டவை பதிவாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

அத்துடன், காற்று மாசு உயிரிழப்பு நாடுகள் பட்டியலில் அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் ஒரு வருடத்தில் மாசுபாட்டால் 24 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவும், சீனாவும் காற்று மாசுபாடு உயிரிழப்பில் உலகில் முன்னணியில் உள்ளன. வங்காளதேசம் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டின் காரணமாக 1,42,883 இறப்புகள் நிகழ்ந்துள்ளன என  உலகளாவிய மாசு கண்காணிப்பக இயக்குனர் பிலிப் லாண்ட்ரிகன் தெரிவித்துள்ளார்.