சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, அக்டோபர்  6 மற்றும் 9ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நநடைபெற உள்ளது.

ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி 22ந்தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து,இன்று  வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

. வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 25ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கி முதல் 6 நாட்களில் 64,299 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. காஞ்சிபுரம், விழுப்புரம் ,நெல்லை, கள்ளக்குறிச்சி ,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் அலுவலகங்களில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது.