அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜனவரி 14 முதல் 22 வரை 9 நாட்களுக்கு உ.பி. மாநிலத்தின் குக்கிராமம் முதல் அனைத்து இடங்களிலும் ராம கதைகள் மற்றும் பஜனைகள் நடத்துவதை முதன்மைக் கடமையாக அம்மாநில அரசு மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள அம்மாநில தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, ஜனவரி 14 முதல் ஜனவரி 22, 2024 வரை மாநிலத்தில் உள்ள அனைத்து ராமர் கோயில்கள், அனுமன் கோயில்கள் மற்றும் வால்மீகி கோயில்களில் ராமகதா, ராமாயண பாராயணம் மற்றும் பஜனை-கீர்த்தனைகளை ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மாநிலத்தின் அனைத்து கோவில்கள் மற்றும் மத ஸ்தலங்களில் நாள் முழுவதும் தொடரும் இந்த நிகழ்ச்சியில் மாநில அரசின் கோட்ட ஆணையர் முதல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தாலுகா நிர்வாகம் வரை அனைவரையும் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளது.