சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த தி.நகர் உள்பட  9 வணிக பகுதிகள் இன்றுமுதல் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா சற்று அதிகரிக்கத் தொடங்கியதால், ஜூலை 30ந்தேதி  மாநிலஅரசு கொரோனா தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளதுடன், சென்னையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் தி.நகர், புரசைவாக்கம் உள்பட 9மார்க்கெட் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களை திறக்க தடை விதித்துது. இந்த தடை இன்று காலையுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, இன்று கொரோனாக கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து, தி.நகர் ரங்கநாதன் தெரு, கொத்தவால் சாவடி உள்பட அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டு, வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன.